காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 480 முறை தாக்குதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 480 முறை தாக்குதல்

புதுடெல்லி: காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் இந்தாண்டில் மட்டும் 480 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதிகளில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து மீறி வருகிறது.

இந்திய நிலைகள், எல்லையோர கிராமங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதுகுறித்து இந்தியா தரப்பில் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பாகிஸ்தான் ராணுவம் கண்டுகொள்வது கிடையாது.

இதனால் இருநாடுகள் இடையே அமைதி பேச்சுவார்த்தை என்பது தள்ளிபோய் கொண்டே இருக்கிறது. இந்தாண்டு மட்டும் இதுவரை காஷ்மீர் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 480 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் அதிகம்.

இந்திய வீரர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள், வீரர்கள் யாருடைய பேச்சையும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுவதால் எல்லை பகுதிகளில் தாக்குதல் அதிகரித்துள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


.

மூலக்கதை