சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நவம்பர் 13 தாக்குதல் பயங்கரவாதி!!
நவம்பர் 13 தாக்குதலாளி சாலா அப்தெல்சலாம் சிறைச்சாலையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளான்.
நவம்பர் 13 தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளில் தற்போது உயிருடன் இருக்கும் ஒரே நபரான சாலா அப்தெல்சலாம் நேற்று செவ்வாய்க்கிழமை Fleury-Mérogis (Essonne) சிறைச்சாலையில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டான். குடல் நோய் காரணமாக அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
GIGN படையின் மருத்துவமனையைச் சுற்றியும் குறித்த மருத்துவ அறையிலும் காவலுக்கு நிற்கின்றனர். 6 தொடக்கம் 8 வரையான மருத்துவர்கள் அவனுக்கு சிகிச்சை அளிப்பதாக அறிய முடிகிறது. பிரான்சில் சாலா அப்தெல் சலாமின் விசாரணைகள் முற்றாக நிறைவடையாத நிலையில், பெல்ஜிய அரசு கடந்த மார்ச் மாதத்தில் அவனுக்கு 20 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.