நவம்பர் 13 - பயங்கரவாதியை தப்பிக்க வைத்த நபர்! - நிபந்தனைகளுடன் விடுவிப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
நவம்பர் 13  பயங்கரவாதியை தப்பிக்க வைத்த நபர்!  நிபந்தனைகளுடன் விடுவிப்பு!!

நவம்பர் 13, கொடூர பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டுவிட்டு, தப்பி ஓடிய பயங்கரவாதி சாலா அப்தெல் சலாமுக்கும் உதவி செய்திருந்த காரணத்துக்காக கைது செய்யப்பட்ட நபர், நிபந்தனைகளில் விடுவிக்கப்பட்டுள்ளான். 
 
Ali Oulkadi எனும் பெப்ஜியத்தில் வசித்த பிரெஞ்சு நபர், பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற சில நாட்களிலேயே (2015) கைது செய்யப்படு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தான். Nord மாவட்டத்தின் Maubeuge சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த குறித்த நபர், நேற்று திங்கட்கிழமை நிபந்தனைகளின் அடிப்படையில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டுள்ளான்.  அவன் பெல்ஜியம் பயணமாக உள்ளான். 
 
நவம்பர் 13 தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் தற்போது உயிருடன் உள்ள சாலா அப்தெல்சலாம், பெல்ஜிய காட்டுக்குள் மறைந்து வாழ குறித்த 31 வயதுடைய நபர் உதவியுள்ளான். விடுவிக்கப்பட்ட நபர் எந்நேரமும் மீண்டும் விசாரணைகளுக்காக அழைக்கப்படலாம். 
 
 
 

மூலக்கதை