அருள்நிதியின் அடுத்த படம்

தினமலர்  தினமலர்
அருள்நிதியின் அடுத்த படம்

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அருள்நிதி, இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

பரத் நீலகண்டன் என்ற புதியவர் இயக்குகிறார். இவர், இயக்குநர் அருண் வைத்தியநாதனிடம் உதவியாளராக பணியாற்றியவர். பட்டினப்பாக்கம் படத்தின் மூலம் தயாரிப்பில் இறங்கிய எஸ்பி சினிமாஸ், இரண்டாவது தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கிறது.

இன்னும் தலைப்பு வைக்கவில்லை, மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.

மூலக்கதை