கபினியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கும் நீர் 500 கனஅடியாக குறைப்பு

தினகரன்  தினகரன்
கபினியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கும் நீர் 500 கனஅடியாக குறைப்பு

பெங்களூரு: காவிரி டெல்டா பகுதியில் பெய்து வந்த மழை நின்று போனதால்  கபினியிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்ட 15 ஆயிரம் கன  அடி நீர் நேற்று  திடீரென 500 கன அடியாக குறைக்கப்பட்டது. கர்நாடக கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை  பிரதேச மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வந்தது. இதனால்,  கடலோர  மாவட்டங்களில் உள்ள அணைகள், ஏரி, குளங்கள் நிரம்பி வந்தன. இரு தினங்களுக்கு முன் கபினி அணையின் நீர் மட்டம் முழு  ெகாள்ளளவான  2,284 அடியை எட்டியது. இதனால், மூன்று நாட்களுக்கு முன்  அணையிலிருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டது.  ஆனால், நேற்று காலை  நிலவரப்படி, காவிரி டெல்டா பகுதியில் பெய்து வந்த மழை  நின்று போனது. இதனால், கபினிக்கு நீர் வரத்து குறைந்ததால், நேற்று பிற்பகல் 2 மணி  அளவில்  விநாடிக்கு 500 கன அடி நீர் அணையிலிருந்து வேளியேற்றப்படுவதாக கபினி  அணையின் தலைமை பொறியாளர் நாகராஜ் கூறினார்.

மூலக்கதை