டோங்கா தீவில் ௬.௧ ரிக்டர் நிலநடுக்கம்
சிங்கப்பூர், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா தீவில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறுகையில், 'இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. நெயாபு நகரிலிருந்து சுமார் 470 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் இது உருவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை' என்றனர்.