இலங்கை கிரிக்கட் வீரரின் தந்தை படுகொலை! விசாரணையில் வௌியாகிய தகவல்

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கை கிரிக்கட் வீரரின் தந்தை படுகொலை! விசாரணையில் வௌியாகிய தகவல்

இலங்கை கிரிக்கட் அணியின் துடுப்பாட்டவீரர் தனஞ்சய டீ சில்வாவின் தந்தை ரஞ்சன் டீ சில்வா நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்டார்.
 
இந்த சம்பவம் தொடர்பில், சீ.சீ.ரி.வி காணொளி ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கல்கிஸ்ஸ பொலிஸார் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
இதற்கு அமைய துப்பாக்கிதாரி தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ரத்மலானை ஞானேந்திர வீதியில், நேற்று இரவு 8.30 மணியளவில் வெள்ளை நிற மகிழூர்தியில் பயணித்த சிலர் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டனர்.
 
இந்த துப்பாக்கி பிரயோகம் ரி56 ரக துப்பாக்கியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் பாதாள குழுவினர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மூலக்கதை