தோல் விலை உயர்வால் பெல்ட், காலணி, ஷூ விலை அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
தோல் விலை உயர்வால் பெல்ட், காலணி, ஷூ விலை அதிகரிப்பு

புதுக்கோட்டை: தோல் விலை உயர்வால் இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களான பெல்ட், காலணிகள், ஷூக்கள் உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிக அளவில் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தோல் தொழிற்சாலைகள் உள்ளது. இந்த தொழிற்சாலைகளில் கால்நடைகளின் தோலை பதப்படுத்தி பெல்ட், காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு விற்பனை செய்யப்படும். இந்நிலையில் தமிழகத்தில் கால்நடை வளர்ப்பு வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் கால்நடைகளின் தோல்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தினசரி கறிக்கடைகளில் வெட்டப்படும் ஆட்டுகளின் தோல்களை அதன் தரத்திற்கு ஏற்றவாறு தோல் தொழிற்சாலையில் இருந்து வரும் வியபாரிகள் வாங்கி செல்வார்கள். இதபோல் தற்போது தமிழக முழுவதும் கிராமங்களில் வைகாசி திருவிழாக்கள் நடை பெறுகிறது. இதனால் அங்கு கோயில்களுக்கு வேண்டுதாலக நுற்றக்கணக்கான ஆடுகள் நேர்த்திகடனுக்காக வெட்டுகிறார்கள். அப்போது கிடைக்கும் தோல்களும் தோல் தொழிற்சாலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.  குறிப்பாக ஒரு நளைக்கு ஒரு பெரு நகர் பகுதியில் சுமார் 200 ஆடுகளின் தோல்கள்  கிடைத்து வந்த இடத்தில் தற்போது பாதியாக குறைந்து 100 தோல்கள் தான் கிடைக்கிறது. இதே நிலைதான் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நீடித்து வருகிறது. இதனால் தொழிற்சாலைக்கான தோல்கள் கிடைப்பதில்லை. இதனால் தமிழகத்தில் பெருவாரியான தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் கால்நடைகளின் வளர்ப்பு குறைந்துள்ளது. இதனால் தோல் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தோல்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பெல்ட்டுகள், காலனிகள் அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 6 மாதத்திற்கு முன்பாக ரூ.600க்கு  விற்பனை செய்த தோலால் தயாரிக்கப்பட்ட பெல்ட் தற்போது ரூ.800க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதபோல் கடந்த 6 மாதத்திற்கு முன்பாக ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட காலணிகள் தற்போது 1,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.   தரமான ஷூக்கள் கடந்த 6 மாத்திற்கு 1.500க்கு விற்பனையானது.  ஆனால் இதே ஷூக்கள் தற்போது. 2,000 முதல் 2,500 வரை விற்கப்படுகிறது.  இதற்கு முக்கிய காரணம் தோல் தொழிற்சாலைகளில் இருந்து தோல் கிடைப்பதில் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முன்பு இருந்து சிறிய தோல் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. தற்போது இருக்கும் குறைவான தொழிற்சாலைகளில் இருந்து பதப்படுத்தப்பட்ட தோல்கள் கிடைப்பதில் காலதாமம் ஏற்படுகிறது. அப்படி கிடைக்கும்போது தோல்கள் விலையும் அதிகரித்துள்ளது.   தமிழகம் முழுவதும் கறிக்கடையில் உள்ள ஒரு தோல் 100க்கு விற்கப்பட்டன. இவை தற்போது 150 ஆக உயர்ந்து விட்டது. தினசரி கிடைக்கும் தோல்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஒரு சில நேரங்களில் தோல் தொழிற்சாலைகள் கேட்கும் தரமான தோல்கள் கிடைப்பதில்லை.  இதற்கு முக்கிய காரணம் தமிழகம் முழுவதும் கிராமங்களில் கால்நடைகளின் வளர்ப்பு வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் தோல்கள் கிடைப்பதில் சிரமம், தொழிற்சாலைகள் குறைவு இப்படி பல்வேறு காரணங்களால் தோல்களால் தயாரிக்கப்படும் பெல்ட்கள், காலனிகள், ஷூக்கள் அனைத்தும் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை  உயர்வு வரும் காலத்தில் நீடிக்கும் என்ற வியாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை