ஸ்டெர்லைட்டின் கூலிப்படையாக போலீசார் செயல்படுகின்றனர் வைகோ குற்றச்சாட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஸ்டெர்லைட்டின் கூலிப்படையாக போலீசார் செயல்படுகின்றனர் வைகோ குற்றச்சாட்டு

அவனியாபுரம்: ஸ்டெர்லைட்டின் கூலிப்படை போல் போலீசார் செயல்படுகின்றனர் என மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இன்று காலை மதுரை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தூத்துக்குடியில் ஒரு ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்துள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிணவறையில் அதிக எண்ணிக்கையில் உடல்கள் உள்ளன. இதனால் என்னை பிணவறையில் பார்க்க அனுமதிக்கவில்லை.

திட்டமிட்டு புரொபஷனல் கில்லர்களை கொண்டு ஸ்னைப்பர் லென்ஸ் வைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். முக்கியமாக, போலீசார் மஞ்சள், பச்சை நிற உடையணிந்து கூலிப்படை போல் செயல்பட்டனர்.

இவர்கள் அரசுக்கும், ஸ்டெர்லைட் வேதாந்தா அனில் அகர்வாலுக்கும் கூலிப்படையாக செயல்பட்டு வருகின்றனர். அனில் அகர்வால் நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என கூறியுள்ளார்.

ஆனால் மக்கள் தொடர் போராட்டங்கள் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவார்கள்’’என்றார்.

.

மூலக்கதை