தூத்துக்குடியில் 12 பேர் படுகொலை! யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
தூத்துக்குடியில் 12 பேர் படுகொலை! யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்!!

யாழ்ப்பாணம், நல்லூர் ஆலய முன்றலில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
இன்று முற்பகல் 10.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
தமிழகம் தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
 
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
“மோடி அரசே தமிழகத்திலா உன் சூட்டுப் பயிற்சி, சுடாதே சுடாதே தமிழர்களைச் சுடாதே, அடிக்காதே அடிக்காதே தமிழர்களை அடிக்காதே, சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா?, இந்திய அரதேச ஆலை அவசியமானதோ தமிழனின் உயிர் அவசியமானதோ?, தமிழக ஆட்சியில் தமிழன் என்ன பலி ஆட்டுக் கூட்டமா?” உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறு நூற்றுக் கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தமிழகப் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர். 
 
இதனைக் கண்டித்தே ஈழ நல்லூரில் இன்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை