துப்பாக்கிச்சூட்டில் ரசிகர் பலி : தனுஷ் வேதனை

தினமலர்  தினமலர்
துப்பாக்கிச்சூட்டில் ரசிகர் பலி : தனுஷ் வேதனை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவின் மாப்பிளை ஒருவர் பலியாகியிருந்தார். இப்போது தனுஷின் ரசிகர் ஒருவர் பலியாகியிருக்கிறார்.

இதுகுறித்து தனுஷ், டுவிட்டரில்... "துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S.ரகு (எ) காளியப்பன் மரணம், என்னை நிலை குலைய வைத்துள்ளது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன்" என பதிவிட்டிருக்கிறார்.

மூலக்கதை