துப்பாக்கிச்சூடு: ஸ்டெர்லைட் நிர்வாகம் வருத்தம்

தினமலர்  தினமலர்
துப்பாக்கிச்சூடு: ஸ்டெர்லைட் நிர்வாகம் வருத்தம்

லண்டன்: ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரும், வேதாந்தா நிறுவனத்தின் தலைவருமான அனில் அகர்வால் டுவிட்டரில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:

துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. வேதனையளிக்கிறது. இது எதிர்பாராதது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்.ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது. ஆலையை திறக்க கோர்ட் மற்றும் நீதிமன்ற உத்தரவிற்காக காத்திருக்கிறோம். அரசு மற்றும், நீதிமன்ற உத்தரவுகளை கடுமையாக பின்பற்றினோம். கடமையை உணர்ந்த சமூகம் நாங்கள். அவர்களின் விருப்பம் மற்றும் எதிர்கால நலனுக்காக தொழில் துவங்கினோம்.தமிழகம், தூத்துக்குடி வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் உதவியாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை