சென்னையில் நாளை ஆட்டோக்கள் இயங்காது: சிஐடியு தொழிற்சங்கம்
சென்னை: சென்னையில் நாளை ஆட்டோக்கள் இயங்காது என்று சிஐடியு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நாளை எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோக்கள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.