சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க மறுத்த ஆதி

தினமலர்  தினமலர்
சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க மறுத்த ஆதி

தமிழில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆதி. அதன் பிறகு ஈரம், யாகாவாராயினும் நாகாக்க, வல்லினம், அரவான், மரகத நாணயம் உள்பட பல படங்களில் நடித்தார். இந்த நிலையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க ஆதியை அணுகினார்கள்.

காரணம் ஆதி தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கில் மார்க்கெட் உள்ளது. ஆதியும் நடித்தால் தெலுங்கு மார்க்கெட் மதிப்பு உயரும் என்று கணக்கு போட்டார்கள். ஆனால் ஆதி நடிக்க மறுத்து விட்டார். காரணம் அவர் தமிழில் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.

இது குறித்து ஆதி கூறியிருப்பதாவது: எனக்கு சொல்லப்பட்ட கேரக்டரில் சில மாற்றங்கள் சொன்னேன் அதை அவர்கள் ஏற்கவில்லை. இப்போது ஒரே நேரத்தில் 3 படங்களில் நடித்து வருகிறேன். அவர்கள் கேட்ட தேதியை என்னால் கால்ஷீட் ஒதுக்கித்தர முடியவில்லை. நடிக்க மறுத்தேன் என்பது தவறு. சந்தர்ப்பங்கள் சரியாக அமையவில்லை. என்றார்.

மூலக்கதை