பிரித்தானிய சிறுமிக்கு முதியவருடன் நடந்த திருமணம்!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரித்தானிய சிறுமிக்கு முதியவருடன் நடந்த திருமணம்!

பிரித்தானிய தாயார் ஒருவர் தமது இளம்வயது மகளை ஏமாற்றி முதியவருக்கு திருமணம் செய்து வைத்துள்ள வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
இந்த விவகாரம் தொடர்பில் குரல் எழுப்பி வந்த சமூக ஆர்வலர்கள், நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றதுடன், பெண்கள் இதுபோன்ற விடயத்தில் கண்டிப்பாக துணிவான முடிவெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 
பிரித்தானியாவில் குடியிருக்கும் பாகிஸ்தானிய தாயாரே தமது 13 வயது மகளை ஏமாற்றி அவரைவிட 16 வயது அதிகமான நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
 
திருமணத்தை அடுத்து முதலிரவும் முடிந்த நிலையில் குறித்த சிறுமி பிரித்தானியா திரும்பிய சில மாதங்களில் கருக்கலைப்புக்கும் தள்ளப்பட்டுள்ளார்.
 
இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தமது மகளுக்கு 18 வயது முடிந்த நிலையில் குறித்த தாயார் மீண்டும் தமது மகளுடன் விடுமுறை என்ற பெயரில் பாகிஸ்தான் சென்றுள்ளார்.
 
அங்கே சென்ற பின்னரே இஸ்லாமிய முறைப்படி அந்த நபருடன் தமது மகளின் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளதை அவர் தெரிவித்துள்ளார்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகளை கடுமையாக தாக்கியதுடன், பாஸ்போர்ட்டை எரித்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.
 
இதனிடையே தாயாரின் நிர்பந்தத்திற்கு கட்டுப்பட்டு திருமணம் நடந்துள்ளது. தொடர்ந்து தமது மகளை பாகிஸ்தானிலேயே விட்டுவிட்டு அந்த தாயார் பிரித்தானியா திரும்பியுள்ளார்.
 
இந்த விவகாரம் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் சிலர் தொடுத்த வழக்கின் விசாரணைக்கு முடிவில் குறித்த தாயார் குற்றவாளி என பர்மிங்காம் கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
பிரித்தானியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்தே கட்டாய திருமணத்திற்கு தடை அமுலில் உள்ளது. மட்டுமின்றி 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை