மத்திய, மாநில அரசுகளுக்கு விஷால் எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
மத்திய, மாநில அரசுகளுக்கு விஷால் எச்சரிக்கை

சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் அடையாள அட்டை வழங்கும் விழாவில் விஷால் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது... நான் உங்களை பத்திரிகையாளர்களாக பார்த்தது கிடையாது. அப்பா, அம்மாவுக்கு பிறகு நான் பயந்தது உங்களை பார்த்து தான். சினிமாத் துறையில் ஒரு நடிகனாக நன்றாக நடி, கிசுகிசு வந்துவிடாமல் நடி, நல்லது செய் என்று வழிகாட்டியாக இருந்தது நீங்கள் தான்.

தூத்துக்குடி சம்பவத்துக்காக இங்கே மவுன அஞ்சலி செலுத்தினோம். அது நல்ல விஷயம். நாடு தவறான பாதையில் போய்க் கொண்டிருக்கிறது. இதற்கும் மேல் நாம் வேடிக்கை பார்க்க முடியாது. இளைஞர்கள் களத்தில் இறங்கி ஒரு முடிவு கட்டினால்தான் உண்டு.

நமது துறை சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமில்லாமல், சமூக விஷயங்களுக்கும் குரல் கொடுக்கவேண்டிய கட்டாயம் இப்போது வந்திருக்கிறது. நாம் ஒற்றுமையாக கைகோர்த்து நிற்கும்போது ஒரு நல்ல சமுதாயம் அமையும் என்று நான் நம்புகிறேன்.

இந்த மேடையில் உங்களை வைத்து ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இதுக்கும் மேலேயும் தமிழக அரசும் மத்திய அரசும் சைலண்டா இருந்தா என்ன நடக்கும் என்பதே தெரியாது.

இவ்வாறு விஷால் கூறினார்.

மூலக்கதை