மேற்கு பரிசில் கொட்டித்தீர்த்த கனமழை! - வீதிகளில் வெள்ளம், போக்குவரத்து முடக்கம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
மேற்கு பரிசில் கொட்டித்தீர்த்த கனமழை!  வீதிகளில் வெள்ளம், போக்குவரத்து முடக்கம்!!

பரிசுக்குள் இந்த வாரம் முழுவதும் கனமழை எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை பரிசின் மேற்கு பிராந்தியங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் போக்குவரத்து முடக்கப்பட்டது. 
 
9 ஆம், 17 ஆம் மற்றும் 18 ஆம் வட்டாரங்களிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்தது. வீதிகளில் மழை வெள்ளம் பாய்ந்ததைத் தொடர்ந்து, மெற்றோ நிலையங்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. இதனால் பல தொடரூந்து நிலையங்கள் மூடப்பட்டு, போக்குவரத்து முடக்கப்பட்டிருந்தன. நேற்று காலையில் இருந்தே வானம் இருட்டாக காணப்பட்டதோடு, மழைக்கான எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது. நண்பகலுக்கு சற்று பின்னதாக மிக மோசமாக மழை கொட்டித்தீர்த்தது. 
 
நேற்று செவ்வாய்க்கிழமையைத் தொடர்ந்து இன்று புதன்கிழமையும், நாளை மற்றும் நாளை மறுதினம் வரை (வெள்ளிக்கிழமை) பரிசுக்குள் மழை பொழியும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 

மூலக்கதை