ஏறுமுகத்தில் காய்கறிகள் விலை
சென்னை : வெயில் காரணமாக, காய்கறிகளின் விலை ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது.
கோயம்பேடு காய்கறி சந்தையில், வெயில் மற்றும் முகூர்த்த நாள் காரணமாக தேவை அதிகரித்துள்ளதால், முக்கிய காய்கறிகளின் விலை ஏறுமுகத்தில் உள்ளது. மொத்தவிலையில், பீன்ஸ் ஒரு கிலோ அதிகபட்சம், 70 ரூபாயாக உள்ளது. அவரை, 45 ரூபாய்க்கும், கேரட், 35 – 40 ரூபாய்க்கும், புடலங்காய், கொத்தவரங்காய், உருளைக்கிழங்கு, 20– 28 ரூபாய்க்கும்; பாகற்காய், 35 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஒரு கிலோ இஞ்சி விலை, 100 ரூபாயை தொட்ட நிலையில், சில நாட்களுக்கு முன், 50 ரூபாயாக விலை குறைந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் விலை அதிகரித்து, 1 கிலோ இஞ்சி, மொத்த விலையில், 70-80 ரூபாயாக உள்ளது. சில்லரை விலையில், 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
பீட்ரூட், சவ்சவ், சேனைக்கிழங்கு, கத்திரி, வெண்டைக்காய், கோவக்காய், பச்சை மிளகாய், நுால்கோல் முருங்கைக்காய் உள்ளிட்டவை, 20 – 25 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வாழைக்காய் ஒன்றின் விலை, மொத்த விலையில், 7 ரூபாயாக உள்ளது. குறைந்தபட்ச விலையில், முட்டைகோஸ், 15 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம், 18 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.