புனே கிரிக்கெட் மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டோனி
புனே: புனே கிரிக்கெட் மைதானத்தை பராமரிக்கும் ஊழியர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி சிறப்பு பரிசு அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
புனேவில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏற்றவாறு ஆடுகளத்தை அமைத்து கொடுத்தனர். இந்த ஆடுகளத்தில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ஆட்டங்களில் 5ல் வெற்றி பெற்றது. நேற்று முன்தினம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டம் முடிவடைந்தவுடன் இந்த வெற்றிக்கு காரணம் மைதானம் என்பதுதான் என்று டோனி கருதினார்.
ஆகையால் மைதானத்தை சிறப்பாக பராமரித்த நபர்களை கவுரவிக்க நினைத்த டோனி இந்த மைதானம் சிறப்பாக அமைய இரவு பகலாக உழைத்த மைதான பராமரிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 20 ஆயிரம் பரிசாக வழங்கினார்.
மேலும் பரிசு பெற்றவர்கள் டோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஃபிரேம் செய்தும் வழங்கி அவர்களை ஊக்குவித்துள்ளார்.
இந்தப் படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து டோனி கூறுகையில், “இது மைதான பராமரிப்பாளர்களின் சிறப்பான செயலுக்கு வழங்கப்பட்டது. அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த பணம் மற்றும் புகைப்படம் வழங்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.
.