பிரான்சில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட நபருக்கு ஆறுவருட சிறை!!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரான்சில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட நபருக்கு ஆறுவருட சிறை!!

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரான்சில் பயங்கரவாத தாக்குதல் நடத்த முற்பட்ட நபர் ஒருவருக்கு ஆறுவருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த குறித்த பயங்கரவாதி, கடந்த 2016 ஆம் ஆண்டு உக்ரைன்-போலிஷ் நாடுகளுக்கிடையேயான எல்லையில் வைத்து உக்ரைன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த நபர் பிரான்சில் இடம்பெற்ற Euro 2016 உதைப்பந்தாட்ட நிகழ்வின் போது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
இரண்டு வருட விசாரணைகளின் பின்னர், நேற்று திங்கட்கிழமை குறித்த நபருக்கு ஆறு வருட சிறைத்தண்டனை வழக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலக்கதை