தொடரூந்து நிலையத்தில் கைது செய்யப்பட்ட நபர் - பல்கேரிய குற்றவாளி!!

PARIS TAMIL  PARIS TAMIL
தொடரூந்து நிலையத்தில் கைது செய்யப்பட்ட நபர்  பல்கேரிய குற்றவாளி!!

மார்செய்யில் உள்ள Saint-Charles தொடரூந்து நிலையத்தில், மர்ம பை ஒன்றுடன் நபர் ஒருவர் நுழைந்ததால், நிலையம் முற்றாக வெளியேற்றப்பட்டிருந்தது வாசகர்கள் அறிந்தது தான். இந்நிலையில் தொடரூந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நபர் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சனிக்கிழமை Saint-Charles நிலையம் அவசரமாக வெளியேற்றப்பட்டதுடன், நான்கு மணிநேர போக்குவரத்து தடையையும் சந்தித்திருந்தது. பின்னர், காவல்துறையினர் நபர் ஒருவரை கைதும் செய்திருந்தனர். விசாரணைகளின் பின்னர் குறித்த நபர், பல்கேரிய குடியுரிமை கொண்டவர் எனவும்,  பல்கேரியா நாட்டில் இவர் தேடப்பட்டுவரும் குற்றவாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த 2012 ஆம் ஆண்டு சர்வதேச கைது வொரண்ட் இவருக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, நாளை செவ்வாய்க்கிழமை அவர் Aix-en-Provence நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளார். 
 
 

மூலக்கதை