மளிகை கடை கடைக்குள் தாக்குதல் - நபர் பலி! பத்து நபர்கள் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
மளிகை கடை கடைக்குள் தாக்குதல்  நபர் பலி! பத்து நபர்கள் கைது!!

நேற்று ஞாயிற்றுக்கிழமை Romainville நகரில், மளிகை கடை ஒன்றுக்குள் வைத்து நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் பத்து பேர்வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில், செந்தனியில் உள்ள Romainville நகரில் தன்னுடைய நண்பன் ஒருவரின் கடையில் நின்றிருந்த நபர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். திடீரென கடைக்குள் நுழைந்த பத்துக்கும் மேற்பட்ட சில நபர்கள் குறித்த நபரை மோசமாக தாக்கியுள்ளனர். காவல்துறையினர் தெரிவித்த தகவலின் படி, குறித்த நபரின் இதயப்பகுதியில் கத்தியால் மிக ஆழமாக குத்தியுள்ளனர். இதனால் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 
 
சம்பவம் தொடர்பாக, Romainville நகருக்குள் பத்து பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொபினி அரச வழக்கறிஞர் அலுவகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொல்லப்பட்டவர் 41 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை