12 ஆம் வட்டாரத்தில் பெரும் தீ! - 400 சதுர மீட்டர் எரிந்து சாம்பல்!!
நேற்று சனிக்கிழமை பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. 60 பேர்வரை சம்பவ இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆம் வட்டாரத்தில் உள்ள boulevard Poniatowski பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடற்றவர்களுக்கான தங்குமிடம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு திடீரென நேற்று மாலை தீப்பிடித்தது. 500 சதுர மீட்டர்கள் கொண்ட இந்த தங்குமிடத்தில் 60 பேர்வரை தங்கியிருந்ததாகவும், தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அருகே T3 ட்ராம் வழி இருந்ததைத் தொடர்ந்து, ட்ராம் சேவைகள் பாதிப்புக்குள்ளானதாகவும் தீயணைப்பு படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
தீவிபத்து ஏற்பட்டதற்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஐந்து தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு, 15 வீரர்கள் சேர்ந்து தீயணை அனைத்துள்ளனர்.