உழவு இயந்திரம் மோதியதில் இரு சிறுவர்கள் பலி!!
உழவு இயந்திரம் ஒன்று மோதியதில் எட்டு வயதுடைய இரு சிவர்கள் உயிரிழந்துள்ளனர். உழவு இயந்திர சாரதி மது போதையில் இருந்ததைத் தொடர்ந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று சனிக்கிழமை 18.00 மணி அளவில் Montbazens (Aveyron) பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. எட்டு வயதுடைய ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமி துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருக்கும் போது, எதிரே வந்துகொண்டிருந்த உழவு இயந்திரம் இருவர் மீதும் மோதியுள்ளது. இதனால் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.
வழக்கை விசாரணைகளுக்கு எடுத்துக்கொண்ட காவல்துறையினர், குறித்த சாரதியை கைது செய்துள்ளனர். மது பேதையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.