கியூபா விமான விபத்தில் 104 பயணிகள் பலி?
கியூபாவில் 104 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
கியூபாவில் தலைநகர் ஹவானா ஜோஸ் மார்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹொல்ஹெயின் நாட்டிற்கு போயிங் 737 ரக விமானம் 104 பயணிகளுடன் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலே விமானம் பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்திற்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் சிக்கிய 104 பயணிகளின் கதி என்ன என்பது தெரியவில்லை.
மேலும் இந்த விபத்து குறித்து உயிர்சேதம் தொடர்பாக எந்த அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.