பயங்கரவாத தாக்குதல் நடத்த முயற்சித்த இரு எகிப்த்தியர்கள் கைது!!
பிரான்சில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட இரு எகிப்த்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எகிப்திய நாட்டைச் சேர்ந்த இருவர்களும் சகோதரர்கள் எனவும், மே மாதம் 15 ஆம் திகதி முதல் இருவரும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்ததாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார். குறித்த இருவரும் பிரான்சில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்குரிய ஆயத்தத்துடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விசாரணைகளை முடித்துக்கொண்டு இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள அவனது வீட்டில் வைத்து Mohamed M எனும் 20 வயதுடைய நபரும் அவனின் சகோதரனும் கைது செய்யப்பட்டிருந்ததாகவும், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சர் Gerard Collomb அறிவித்தார்.