யாழில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்!

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்!

யாழில் மோட்டார் சைக்கிளில் மது போதையில் பயணித்த இரு பெண்கள் விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
 
யாழ் .இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ் நகர் நோக்கி கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் சென்ற நிலையில் இவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
 
பிளசர் ரக  மோட்டார் சைக்கிளில் ஒன்றே சம்பவத்திற்கு விபத்துக்குள்ளாகியுள்ளது.
 
விபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது இரு பெண்களும் போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்துள்ளனர்.
 
இதனால் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த  பொலிஸார் இரு பெண்களையும் அவ்விடத்தில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

மூலக்கதை