மோடியின் காஷ்மீர் வருகைக்கு பிரிவினைவாத அமைப்புகள் எதிர்ப்பு

தினமலர்  தினமலர்
மோடியின் காஷ்மீர் வருகைக்கு பிரிவினைவாத அமைப்புகள் எதிர்ப்பு

ஸ்ரீநகர்: பிரதமர் மோடியின் காஷ்மீர் வருகையின் போது அவருக்கு எதிராக போராட்டம் நடத்திட பிரிவினைவாத அமைப்புகள் முடிவு செய்துள்ளன. வரும் 19-ம் தேதி பிரதமர் மோடி காஷ்மீர் வருகை தருகிறார். கிஷன்கங்காவில் 330 மெகாவாட் நீர்மின்திட்டத்தை துவக்கி வைத்தும், ஷெ ரீ காஷ்மீர்பல்கலை.பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார்.இந்நிலையில் பிரதமர் மோடி வருகையை கண்டித்து காஷ்மீரின் பிரிவினைவாத அமைப்பு தலைவர்கள் மெகா போராட்டம் நடத்திட உள்ளனர்.
இது தெடார்பாக பிரிவினைவாத அமைப்பு தலைவர்களான சையத் அலிஷா கிலானி, யாசின் மாலிக், மிர்வாஸ் உமர் பரூக் ஆகியோர் கூட்டாக ஆலோசனை நடத்தினர். பின்னர் போராட்டம் நடத்திடவும் கடையடைப்பு பேராட்டம் நடத்திடவும் முடிவு செய்துள்ளனர்.


மூலக்கதை