திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் கைது

தினகரன்  தினகரன்

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் அரிதாரிமங்களம் கிராமத்தில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தைகள் நல குழும தலைவர் அளித்த புகாரின் பேரில் தந்தை சேகர் மற்றும் தாய் லட்சு என்பவர்களை கைது செய்துள்ளனர். இருவரையும் சிறையில் அடைக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி மகிழேந்தி உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை