தீவிரவாதிகள் தாக்குதல் 2 வீரர்கள் பரிதாப சாவு

தினகரன்  தினகரன்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகளில் தொடர் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல்களில் இந்த ஆண்டில் இதுவரை 31 பேர் உயிரிழந்ததாகவும் இதில் 16 பேர் பாதுகாப்பு படையினர் என்றும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் லாம் காட்டுப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் இரவு தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் சுட்டதில், அஜய் என்ற  பாதுகாப்பு படை வீரரும், காவலர் லதீத் குஜ்ரி என்பவரும் உயிரிழந்தனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் கடுமையான எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தீவிரவாதி 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர். அப்பகுதியில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பவ பகுதியில் வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை