கதுவா பலாத்கார கொலை வழக்கு இரண்டு போலீஸ் அதிகாரிகள் கைது

தினகரன்  தினகரன்

ஜம்மு: ஜம்முவில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், போலீஸ் உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு போலீஸ் அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரின் கதுவாவில் கடந்த ஜனவரியில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சிறுமியின் பெற்றோர் சார்பில் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பான  ஆதாரங்களை உதவி ஆய்வாளர் அனந்த் தத்தா மற்றும் சிறப்பு போலீஸ் அதிகாரி தீபக் கஜூரியா ஆகியோர் அழித்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும்,மாநில குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை  ரத்து செய்யப்படவேண்டும்;  பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கைக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது; எனவே புதிதாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், பலாத்கார கொலை வழக்கில் ஆதாரங்களை அழித்ததாக உதவி ஆய்வாளர் அனந்த் தத்தா மற்றும் சிறப்பு போலீஸ் அதிகாரி தீபக் கஜூரியா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை