பாக்.கில் மாயமான சீக்கியர் நண்பர் வீட்டில் கண்டுபிடிப்பு
லாகூர்: பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரை சேர்ந்த சீக்கியர் அமர்ஜித் சிங். இவர் கடந்த 12ம் தேதி சீக்கிய யாத்திரிகர்களுடன் பாகிஸ்தானின் லாகூர் அருகேயுள்ள நன்கானா சாகிப்பில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவுக்கு சென்றார். சுற்றுலா விசாவில் சென்ற இவர் கடந்த 16ம் தேதி முதல் திடீரென மாயமானது தெரியவந்தது. அதிகாரிகள் தேடியபோது அமர்ஜித் சிங் லாகூர் பேஸ்புக் நண்பர் அமிர் ரசாக் வீட்டிற்கு சென்றிருந்தது பாக் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இந்தியாவிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.