உண்ணாவிரதம் சரத்குமாருக்கு விஜயகாந்த் வாழ்த்து
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உண்ணாவிரதம் இருக்கும் சமக தலைவர் சரத்குமாருக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:சமக தலைவர் சரத்குமார் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பதை வரவேற்பதுடன், இந்த உண்ணாவிரதம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.