ஜெர்மனியில் நடந்த சர்வதேச அன்னப்பிளவு, கபால சீரமைப்பு மாநாடு : டாக்டர் எஸ்.எம்.பாலாஜிக்கு பாராட்டு

தினகரன்  தினகரன்

ஜெர்மனி: ஜெர்மனியில் நடைபெற்ற 12 வது சர்வதேச அன்னப்பிளவு மற்றும் கபால சீரமைப்பு மாநாட்டில் மிக  உயரிய அறிவியல் ஆராய்ச்சி விருதான பேராசிரியர் டேவிட் பிரிசியஸ் விருது டாக்டர் எஸ்.எம்.பாலாஜிக்கு வழங்கப்பட்டது. ஜப்பானை தலைமை இடமாக கொண்ட உதடு  மற்றும் அன்னப்பிளவிற்கான சர்வதேச அமைப்பான ஐ.சி.பி.எஸ் அமைப்பு வழங்கும் இந்த விருதினை பெரும் முதல் இந்தியர் என்கிற பெருமையை  டாக்டர் எஸ்.எம்.பாலாஜி பெற்றுள்ளார். சென்னையை சேர்ந்த பல் மற்றும் முக சீரமைப்பு மருத்துவரான எஸ்.எம்.பாலாஜி பிளவு சீரமைப்பிற்காக புரோட்டின்களை வைத்து எலும்பு மற்றும் சதையை  மறுபடியும் உருவாக்கும் முறைகளை பற்றி மேற்கொண்ட ஆய்வுகளுக்காக இந்த விருதினை பெற்றுள்ளார். 2வது முறை அறுவை சிகிச்சை செய்ய நேரிடுவதை தவிர்ப்பதற்கும், செயற்கை பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்க்கும்  டாக்டர் எஸ்.எம்.பாலாஜியின் ஆராய்ச்சி உதவும் என 12வது சர்வதேச அன்னப்பிளவு மற்றும் கபாலசீரமைப்பு மாநாட்டில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மூலக்கதை