பாதசாரிகள் கூட்டத்தில் டிரக் மோதி 10 பேர் பலி: கனடாவில் பயங்கரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாதசாரிகள் கூட்டத்தில் டிரக் மோதி 10 பேர் பலி: கனடாவில் பயங்கரம்

டொரண்டோ: கனடாவில் பாதசாரிகள் கூட்டத்தில் மர்ம நபர், டிரக்கை மோதவிட்டதில் 10 பேர் பரிதாபமாக இறந்தனர். 15 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பாதசாரிகள் கூட்டத்தில் திட்டமிட்டு  வாகனங்களை மோதவிட்டு படுகொலை செய்வது ஐ. எஸ். தீவிரவாதிகளின் நடவடிக்கையாக உள்ளது.

இதுேபான்ற ஒரு சம்பவம் கனடாவின் டொரண்டோ நகரில் நேற்று நடந்துள்ளது.

டொரண்டோவில் நேற்று பிற்பகலில் திடீரென ஒரு டிரக் வேகமாக வந்தது. திடீரென பாதசாரிகள் கூட்டத்துக்குள், அந்த டிரக் புகுந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் இறந்தனர். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து டொரண்டோ போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

டிரக்கை ஓட்டி வந்த டொரண்டோ புறநகர் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் மினசியன் (25) என்பவரை ைகது செய்தனர்.

அவர் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

.

மூலக்கதை