பழனி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மெக்கானிக் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோரிக்கடவில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மெக்கானிக்கை போலீசார் கைது செய்துள்ளனர். 9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மெக்கானிக் விஜய்பாபு என்பவரை பழனி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.