இடஒதுக்கீட்டை கடைபிடிக்கவில்லை: சென்னை ஐ.ஐ.டி.க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்

சென்னை: சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஐ.ஐ.டி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து இடஒதுக்கீட்டை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது.

மூலக்கதை