உதகை எச்.பி.எஃப். தொழிற்சாலை ஊழியர்கள் அனைவருக்கும் விருப்ப ஓய்வு: மத்திய அரசு அறிவிப்பு
உதகை: உதகை எச்.பி.எஃப். தொழிற்சாலை ஊழியர்கள் அனைவருக்கும் விருப்ப ஓய்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆலையை மூட படிபடியாக ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் போட்டோ ஃபிலிம் தயாரிப்பு ஆலையில் பணிபுரிந்து வந்த 165 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு மத்திய அரசு அறிவித்துள்ளது. 1966ம் ஆண்டு ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.