உடல்நலக்குறைவுக் காரணமாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.புஷ் மருத்துவமனையில் அனுமதி

தினகரன்  தினகரன்

வாஷிங்டன் : உடல்நலக்குறைவுக் காரணமாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.புஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 93 வயதாகும் இவருக்கு ரத்தத்தில் பரவிய தொற்று காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஹூஸ்டன் நகரில் உள்ள மெதடிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் மேலும் தகவல்களை பின்னர் அறிவிப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் முன்னாள் அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், உயிருக்கே அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். கடந்த வாரம் ஜார்ஜ் புஷ்யின் மனைவி பார்பரா புஷ் காலமானார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்று திரும்பிய நிலையில் புஷ் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் 41-வது அதிபராக ஜார்ஜ் எச்.புஷ் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை