சினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம்

தினமலர்  தினமலர்
சினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம்

ஜாதி வெறியால் ஆணவக்கொலை செய்யப்பட்டார் உடுமலைப்பேட்டை சங்கர். பின்தங்கிய வகுப்பை சேர்ந்த இவர் ஆதிக்க சாதியை சேர்ந்த கவுசல்யாவை காதலித்ததற்காக நடு ரோட்டில் படுகொலை ஆனார். இந்த கொலை சம்பவத்தில் தப்பிய கவுசல்யா தற்போது ஆணவக் கொலைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.

சங்கரின் கொலை சம்பவம் மாறாத சமூகம் என்ற பெயரில் சினிமாவாக தயாராகி வருகிறது. இதில் காதர் என்ற புதுமுகம் சங்கராகவும், திலிஜா என்ற புதுமுகம் கவுசல்யாவாகவும் நடித்து வருகிறார்கள். இவர்கள் தவிர நமோ நாராயணா, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். அஆஇஈ திரைப் பட்டறையின் சார்பில் என்.மணிகண்டன் தயாரிக்கிறார், பங்கஜ் எஸ்.பாலாஜி இயக்குகிறார். தினேஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், டேனியல் ஜோசப் மற்றும் சம்பத் இசை அமைக்கிறார்கள். படப்பிடிப்பு நடந்து வருகிறது.

மூலக்கதை