ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல்: 31 பேர் பலி

தினமலர்  தினமலர்
ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல்: 31 பேர் பலி

காபூல்: காபூலில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைபடை தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

தாக்குதல்

ஆப்கன் தலைநகர் காபூலில் வாக்காளர் பதிவு மையம் உள்ளது. தேசிய அடையாள அட்டை சான்று வழங்கும் அலுவலகமும் அங்கு உள்ளது. இன்று காலை இந்த மையத்தின் வாசலில் பயங்கரவாதி ஒருவன் தனது உடலில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இதில் 4 பேர் பலியானதாகவும், 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகின. சம்பவத்தை தொடர்ந்து, அரசுக்கு எதிராகவும், பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவும் பொது மக்கள் கோஷம் எழுப்பினர்.

அதிகரிப்பு


இந்நிலையில், இந்த சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். பலர் காயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எந்த பயங்கரவாதமும் பொறுப்பேற்று கொள்ளவில்லை.

மூலக்கதை