ஆபத்தில் சிக்க வேண்டாம் என இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

PARIS TAMIL  PARIS TAMIL
ஆபத்தில் சிக்க வேண்டாம் என இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கை மக்களுக்கு இலங்கை சுங்க திணைக்களம் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
 
அதிஷ்டச் சீட்டுக்கள் வெற்றிகொண்டுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பண மோசடி செய்கின்றவர்களுக்கு ஏமாற வேண்டாம் என சுங்க திணைக்களம் கோரியுள்ளது.
 
அதிஷ்டச் சீட்டுக்களுக்கான பரிசில்கள் சுங்க பிரிவினரால் வழங்கப்படும் எனக் கூறி இத்தகைய மோசடிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த காலங்களில் இவ்வாறான பல மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
வெளிநாடுகளில் இருந்து பரிசில்கள் அனுப்பப்படுவதாக கூறி மக்களிடம் இருந்து பணம் மோசடி செய்வதாக விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
 
கடந்த காலங்களினுள் வெளிநாட்டில் வசிப்பதாக கூறி வெற்றியாளர்களுக்கு கிடைத்துள்ள பரிசினை அனுப்புவதற்கு பாரிய அளவு பணம் மோசடி செய்துள்ள சம்பவங்கள் தொடர்பில் சுங்க பிரிவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
 
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல்வேறு குழுக்கள் இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பேஸ்புக் ஊடாக லொத்தர் பரிசு கிடைத்துள்ளதாக கூறி இலங்கை தொலைபேசி இலக்கத்திலிருந்து அழைப்பினை ஏற்படுத்துவர். இந்த பரிசினை விடுவித்து கொள்வதற்காக சுங்க பிரிவிற்கு பணம் செலுத்த வேண்டும் என்று வங்கிக் கணக்கு ஒன்றை வழங்குகின்றனர். இதனால் ஏமாற்றம் அடைந்த பலர் பெருந்தொகை பணத்தை அந்த வங்கிக் கணக்கில் வைப்பு செய்துள்ளனர்.
 
இந்த மோசடி நடவடிக்கையின் மூலம் இலங்கையர்கள் பலர் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
இவ்வாறான மோசடிகள் தொடர்பான தகவல்களை 0112 471471 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு வழங்குமாறு சுங்க பிரிவு அறிவித்துள்ளது.

மூலக்கதை