வெள்ளவத்தையில் நள்ளிரவு நேரங்களில் பொது மக்களை அச்சுறுத்தும் மர்மநபரால் பதற்றம்!

PARIS TAMIL  PARIS TAMIL
வெள்ளவத்தையில் நள்ளிரவு நேரங்களில் பொது மக்களை அச்சுறுத்தும் மர்மநபரால் பதற்றம்!

கொழும்பு, வெள்ளவத்தையில் நள்ளிரவில் செல்லும் வாகனங்களை அச்சுறுத்தும் மர்ம நபரால் பதற்றம் நிழவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த மர்ம நபர்  தொடர்பில் காணொளி ஒன்று இந்த நாட்களில் வெளியாகி உள்ளது.
 
வெள்ளவத்தையின் மெரின் ட்ரைவ் வீதிக்கு அருகில் அடையாளம் தெரியாத இளைஞன் ஒருவர் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களை மறித்து நிறுத்துவதாக தெரியவந்துள்ளது.
 
மெரின் ட்ரைவ் வீதியில் பயணிக்கும் போது எதிர்பாராத விதமாக அவர் வீதிக்கு நடுவில் சென்று வாகனங்களை நிறுத்துவதற்கு இந்த இளைஞன் நடவடிக்கை மேற்கொள்கின்றார்.
 
இவ்வாறான அச்சுறுத்தலுக்கு பலர் முகங்கொடுத்துள்ளனர். இந்த நிலையில், இதனை துணிச்சலாக சாரதி ஒருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.
 
இளைஞனின் செயற்பாட்டின் காரணமாக வாகனத்தை பின் பக்கமாக ஓட்டிச் சென்று அந்த இடத்தை விட்டு சென்று விடுகின்றார்.
 
இது தொடர்பான காணொளியை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த சாரதி, இரவில் தனியாக செல்லும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்கமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
 

மூலக்கதை