தடைசெய்யப்பட்ட பகுதியில் நீந்தச் சென்ற சிறுவன்! - நீரில் மூழ்கி பலி!!

PARIS TAMIL  PARIS TAMIL
தடைசெய்யப்பட்ட பகுதியில் நீந்தச் சென்ற சிறுவன்!  நீரில் மூழ்கி பலி!!

நேற்று வெள்ளிக்கிழமை, தடை செய்யப்பட்ட ஆற்றுப்பகுதி ஒன்றுக்கு நான்கு சிறுவர்கள் நீந்தச் சென்றுள்ளனர். அதில் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். 
 
நான்கு சிறுவர்கள், அனுமதி இன்றி Val d'Oise இல் உள்ள் Cergy-Pontoise ஓய்வு பூங்காவின் பின்புறத்தில் உள்ள குளத்துக்குச் சென்றுள்ளனர். பொதுமக்க்ள் செல்லவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்ட பகுதி அது. குளத்தில் குளித்த சிறுவர்களில் 16 வயதுடைய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். மீட்பு படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு குவிக்கப்பட்டு, சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 
 
நேற்று முன் தினம் வியாழக்கிழமை இரவு, Issy-les-Moulineaux (Hauts-de-Seine) இல் உள்ள குளத்துக்கு நண்பர்களுடன் சென்ற 14 வயது சிறுவன் ஒருவர், வேண்டுமென்றே தள்ளிவிடப்பட்டு  உயிரிழந்த சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை