Breaking: போராட்டக்காரர்கள் போலீஸை தாக்கியதில் உடன்பாடில்லை…: சிம்பு

FILMI STREET  FILMI STREET
Breaking: போராட்டக்காரர்கள் போலீஸை தாக்கியதில் உடன்பாடில்லை…: சிம்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்ற போது நடிகர் மன்சூர் அலிகானை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்து சில நாட்களாகியும் அவரை இன்னும் விடுதலை செய்யவில்லை.

அதுபற்றி தெரிந்துக் கொள்ள இன்று சிம்பு போலீஸ் கமிஷ்னர் ஆபிஸ் வந்தார் சிம்பு.

அப்போது…

மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணத்தையும், எப்போது விடுவிக்கப்படுவார் என்பதையும் அறிய வந்தேன்.

மற்றபடி எந்தப் பிரச்சனையும் செய்ய நான் இங்கு வரல.

ஐ.பி.எல் போராட்டத்தின்போது காவல் துறையினர் தாக்கப்பட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை. தாக்குதலுக்கு உள்ளான அவர்கள் போராட்டக்கார்ர்கள் மீது திருப்பி தாக்குதல் நடத்தாமல் இருந்ததற்கு என் பாராட்டுகள்.” என்றார்.

சில தினங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் போலீஸ் தாக்கப்பட்டது வன்முறையின் உச்சம் என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

அதற்கு சீமான், பாரதிராஜா உள்ளிட்டோர் அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தது இங்கே கவனிக்கத்தக்கது.

Simbu condemns Tamilnadu Cauvery Protestors attacked Police

மூலக்கதை