பேரூந்து கட்டுப்பாட்டாளரை தாக்கிய பெண்! - குழந்தைகளை கைவிட்டு தப்பி ஓட்டம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பேரூந்து கட்டுப்பாட்டாளரை தாக்கிய பெண்!  குழந்தைகளை கைவிட்டு தப்பி ஓட்டம்!!

பெண் ஒருவர் பேரூந்து கட்டுப்பாட்டாளரை மோசமாக தாக்கியுள்ளார். வியாழக்கிழமை இச்சம்பவம் Sartrouville (Yvelines) இல் இடம்பெற்றுள்ளது. 
 
பெண் ஒருவர் தனது இரு குழந்தைகளுடன் பேரூந்தில் பயணமாகிக்கொண்டிருந்தார். ஆனால், குறித்த இரு பிள்ளைகளுக்கும் பயணச்சீட்டு இல்லை. பின்னர் அப்பெண் பேரூந்து கட்டுப்பாட்டாளரை மிக மோசமாக தகாத வார்த்தியில் திட்டியுள்ளதாகவும், எவ்வித தயக்கமுமின்றி குறித்த கட்டுப்பாட்டாளரை அப்பெண் தாக்கிவிட்டு, பேரூந்தை விட்டு இறங்கி தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
4 மற்றும் 11 வயதுடைய பிள்ளைகளை உடனடியாக காவல்துறையினர் பாதுகாப்பாக அழைத்துக்கொண்டனர். அதைத் தொடர்ந்து பேரூந்து கட்டுப்பாட்டாளரிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தவிர, குறித்த பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மூலக்கதை