‘5ஜி’ தொழில்நுட்பம் உயர்மட்ட குழு ஆய்வு
புதுடில்லி : நாட்டில், ‘5ஜி’ தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து, உயர்மட்டக் குழுவில் விவாதிக்கப்பட்டது.
மொபைல் போனில், அதிவேகமாக, படங்கள், தரவுகளை அனுப்ப, ‘5ஜி’ தொழில்நுட்பம் உதவுகிறது. இதை, இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய, உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவின், மூன்றாவது ஆய்வுக் கூட்டம், டில்லியில் நடந்தது. இதில், ‘5ஜி’ தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, விரைவில், இடைக்கால வரை வறிக்கை தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், தொலை தொடர்பு துறை செயலர், அருணா சுந்தரராஜன் கூறும் போது, ‘5ஜி தொழில்நுட்பத்தில், அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக இருக்க, இந்தியா விரும்புகிறது. ‘ஜூன் மாதத்துக்குள்,‘5ஜி’ தொடர்பான வரைவறிக்கை தாக்கல் செய்யப்படும்’ என, தெரிவித்திருந்தார். ‘5ஜி’ தொழில்நுட்ப உயர்மட்டக் குழுவின் அடுத்த கூட்டம், ஜூன், 14ல் நடைபெற உள்ளது.