புதிய சாதனை புரிய தயாராகும் டி.சி.எஸ்.,; சந்தை மூலதனம் ரூ.6.60 லட்சம் கோடியை நெருங்குகிறது

தினமலர்  தினமலர்
புதிய சாதனை புரிய தயாராகும் டி.சி.எஸ்.,; சந்தை மூலதனம் ரூ.6.60 லட்சம் கோடியை நெருங்குகிறது

புதுடில்லி : டி.சி.எஸ்., என, சுருக்­க­மாக அழைக்­கப்­படும், டாடா கன்­சல்­டன்சி நிறு­வ­னத்­தின் சந்தை மூல­த­னம், 6.60 லட்­சம் கோடி ரூபாயை நெருங்­கி­யுள்­ளது. இதை தாண்­டும்­பட்­சத்­தில், இந்­தி­யா­வில் இத்­த­கைய சாதனை புரிந்த முதல் நிறு­வ­னம் என்ற சிறப்பை, டி.சி.எஸ்., பெறும்.

டி.சி.எஸ்., கடந்த, 2017 – 18ம் நிதி­யாண்­டின், ஜன­வரி – மார்ச் வரை­யி­லான நான்­கா­வது காலாண்டு நிதி­நிலை அறிக்­கையை, நேற்று முன்­தி­னம் வெளி­யிட்­டது. அதில், டி.சி.எஸ்., நிகர லாபம், முந்­தைய காலாண்டை விட, 5.71 சத­வீ­தம் உயர்ந்து, 6,904 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது. இது, சந்தை எதிர்­பார்ப்பை விட, அதி­க­மாக இருந்­தது. அத்­து­டன், நிறு­வ­னத்­தின் பொன் விழாவை முன்­னிட்டு, பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, ஒரு பங்­கிற்கு, ஒரு பங்கு வீதம் போனஸ் வழங்­கு­வ­தாக டி.சி.எஸ்., அறி­வித்­தது. இது தவிர, ஒரு பங்­கிற்கு, 29 ரூபாய் டிவி­டெண்டு அளிக்­கப்­படும் என, தெரி­வித்­தது.

இது­போன்ற கார­ணங்­க­ளால், நேற்று, டி.சி.எஸ்., பங்­கு­க­ளுக்கு அதிக கிராக்கி காணப்­பட்­டது. மும்பை பங்­குச் சந்­தை­யில், டி.சி.எஸ்., பங்கு விலை, ஓராண்­டில் இல்­லாத வகை­யில், 6.76 சத­வீ­தம் உயர்ந்து, 3,406.40 ரூபாய் என்ற அள­வில் நிலை பெற்­றது. தேசிய பங்­குச் சந்­தை­யி­லும், பங்கு விலை, 6.62 சத­வீ­தம் அதி­க­ரித்து, 3,402.45 ரூபா­யில் நிலை கொண்­டது.இதன் மூலம், டி.சி.எஸ்., பங்­கின், சந்தை மூல­த­னம், நேற்று ஒரே நாளில், 41,301 கோடி ரூபாய் அதி­க­ரித்து, 6,52,083 கோடி ரூபா­யாக ஏற்­றம் கண்­டது. டி.சி.எஸ்., சந்தை மூல­த­னம், முதன் முறை­யாக, கடந்த, ஜன., 24ல், 6 லட்­சம் கோடி ரூபாயை தாண்­டி­யது.

இதை­ய­டுத்து, குறு­கிய காலத்­தில், தற்­போது, 6.50 லட்­சம் கோடி ரூபாயை தாண்­டி­யுள்­ளது. டி.சி.எஸ்., பங்கு ஒன்­றின் விலை, 3,448 ரூபாயை எட்­டும் பட்­சத்­தில், இந்­தி­யா­வில், 10 ஆயி­ரம் கோடி டாலர் சந்தை மூல­த­னத்தை எட்­டிய, முதல் நிறு­வ­னம் என்ற சிறப்பை பெறும். அப்­போது, ஒரு டாலர், 66 ரூபாய் என்ற அடிப்­ப­டை­யில், இதன், சந்தை மூல­த­னம், 6.60 லட்­சம் கோடி ரூபா­யாக உய­ரும். டி.சி.எஸ்., வரும் வாரத்­தில், இந்த சாதனை புரி­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

என்ன காரணம்?
இந்­தி­யா­வில், ‘ஆட்­டோ­மே­ஷன், ஏ.ஐ.,’ போன்ற புதிய தொழில்­நுட்­பங்­க­ளின் பயன்­பாடு பர­வ­லாகி வரு­கிறது. இவை, பாரம்­ப­ரிய சாப்ட்­வேர் சேவை நிறு­வ­னங்­க­ளின் வளர்ச்­சிக்கு சவா­லாக உள்­ளன. அமெ­ரிக்­கா­வின் விசா கட்­டுப்­பா­டும், இந்­நி­று­வ­னங்­களை பாதித்­துள்­ளது. ஆனால், சாப்ட்­வேர் சேவை­யில் ஈடு­பட்­டுள்ள, டி.சி.எஸ்., மட்­டும், சிறப்­பான வளர்ச்சி கண்டு வரு­வ­தற்கு, அதன் வர்த்­தக உத்தி தான் கார­ணம் என, கூறப்­ப­டு­கிறது. இதர ஐ.டி., நிறு­வ­னங்­கள், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, சாப்ட்­வேர் சேவை­யு­டன், ஏ.ஐ., போன்ற நவீன தொழில்­நுட்­பங்­களை இணைத்து வழங்­கு­கின்­றன. ஆனால், டி.சி.எஸ்., முதன் முத­லாக, அதே தொழில்­நுட்­பத்­தில், ‘இக்­னியோ’ என்ற சாப்ட்­வேரை உரு­வாக்கி, தனியே விற்­பனை செய்­கிறது. இது போல, எதிர்­கால தொழில்­நுட்­பம் சார்ந்த வர்த்­தக உத்­தி­களை முத­லில் பயன்­ப­டுத்தி, நம்­பர் – 1, ஐ.டி., நிறு­வ­ன­மாக, டி.சி.எஸ்., திகழ்­கிறது.

மூலக்கதை