பாலியல் வன்கொடுமை : தூக்கு தண்டனையே சரி : விஷால்

தினமலர்  தினமலர்
பாலியல் வன்கொடுமை : தூக்கு தண்டனையே சரி : விஷால்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழுவதோடு, பாலியல் தொடர்பான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விஷால் பங்கேற்றார்.

அவர் பேசும்போது, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு பள்ளியிலேயே தற்காப்பு கலைகள் தொடர்பான பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்றார்.

மூலக்கதை