டிரம்பின் பொய்கள் வெறுப்பளிக்கிறது மாஜி எப்.பி.ஐ. இயக்குனர் சாடல்

தினமலர்  தினமலர்

நியூயார்க்: டிரம்பின் நடவடிக்கையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது, என்று முன்னாள் எப்.பி.ஐ., இயக்குனர் ஜேம்ஸ் கோமி தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், "அமெரிக்கா அதிபர் டிரம்பின் நடவடிக்கைகளை சுற்றியுள்ள யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அவரின் நடவடிக்கைகள் நாட்டின் சட்டம் மற்றும் நேர்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.தனிப்பட்ட முறையில் அவர் மீது தனக்கு எந்த வெறுப்பும் இல்லை. ஆனால் அவரின் சட்டத்தை மீறிய நடவடிக்கை மீதும், அவரது பொய்கள் மீதும் வெறுப்புள்ளது” என்று கூறினார்.ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு செய்த ஆதாரங்கள் அடங்கிய 33,000 இ-மெயில்களை ஹிலாரி நீக்கினார், என டிரம்ப் தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரசாரம் செய்தார்.அமெரிக்க எஃப்பிஐ அதிகாரிகள் விசாரித்ததில், நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய கடித்தத்தில் ஜேம்ஸ் கோமி, "ஹிலாரி குற்றம் புரிந்தார் என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. எப்.பி.ஐ.-யின் இந்த முடிவில் மாற்றம் இல்லை" என்று கூறியிருந்தார்.இந்த நிலையில் டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கோமி, எப்.பி.ஐ பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

மூலக்கதை